தீயில் எரிந்து மளிகைக்கடை நாசம் மர்மநபர்கள் தீவைத்ததாக கூறி சாலைமறியல்

நீடாமங்கலம் அருகே தீயில் எரிந்து மளிகைக்கடை நாசமானது. கடைக்கு மர்மநபர்கள் தீவைத்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தீயில் எரிந்து மளிகைக்கடை நாசம் மர்மநபர்கள் தீவைத்ததாக கூறி சாலைமறியல்
Published on

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள பெரம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 34). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இந்த கடை நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கடைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்மராஜின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ரிஷியூர்-நீடாமங்கலம் சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com