திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்த விபத்தில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

தாளவாடி,

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில் மதுரையில் இருந்து மைசூருக்கு டின்களில் எண்ணெய் பாரத்தை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 13-வது கொண்ட ஊசி வளைவில் திரும்பியபோது பாரம் தாங்காமல் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.

லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதை வழியாக கார், இருசக்கர வாகனங்கள் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்களால் செல்ல முடியவில்லை. இதனால் ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டு ரோட்டோரம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது. திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் தமிழகம்-கர்நாடகம் இடையே சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com