சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த இடத்திலும் மணல் திருட்டு என்பதே இருக்கக்கூடாது. சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனி கவனம் செலுத்தி மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் யாராவது மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்தால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்றவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும். அதே போன்று ரவுடித்தனம் செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக வெடி பொருட்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் நிலைய பணிகளை சட்டத்துக்கு உட்பட்டே மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். போலீஸ்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com