நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர் - சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிக்கு திரும்புகிறார்கள். அவர்கள் பணிக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர் - சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகளில் குறைந்த அளவு ஊழியர்களே பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர்.

சிறப்பு பஸ்கள்

இவர்கள் பணிக்கு சென்று வர வசதியாக அரசு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுகாதார பணியாளர்கள், போலீசார் பணிக்கு செல்வதற்காக மாவட்டம் முழுவதும் 11 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களையும் அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க அறிவுறுத்தினால், அந்த பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் பொது போக்குவரத்துக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

நெல்லை-தென்காசி

இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வர ஏதுவாக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து தென்காசி, பாபநாசம், சங்கரன்கோவில் மற்றும் ராதாபுரத்தில் இருந்து நெல்லை ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில், சிவகிரி, சுரண்டை ஆகிய ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக்கழக நெல்லை கோட்ட அலுவலகம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com