100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்க கோரி ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்க கோரி ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்க கோரி ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
Published on

முற்றுகை

பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்தது ஆதிவராகபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 100 நாள் திட்ட பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த திட்டத்தில் வேலை செய்த பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். அப்போது பணிகளை வழங்கு, பணிகள் வழங்கு என்று கோஷம் எழுப்பினர்.

பேச்சு வார்த்தை

அதன்பிறகு அலுவலகத்துக்குள் நுழைந்து அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதன் பிறகு முற்றுகையிட்ட பெண்களில் சிலரை அலுவலகத்துக்குள் அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது ஊராட்சியில் 100 நாள் திட்ட பணிகளை வழங்க போதிய நிதி இல்லை என்றும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்கள் நிதி வழங்கிய பிறகு பணிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com