பெற்றோர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை

பெற்றோர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை
Published on

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு ராந்தம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் ஆரணியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிவேதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் நிவேதாவை திட்டி உள்ளனர்.

இதனால் நிவேதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நிவேதா அவரது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com