17 வயது சிறுமியை திருமணம் செய்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கைது

17 வயது சிறுமியை திருமணம் செய்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த பெற்றோரும் சிக்கினர்.
17 வயது சிறுமியை திருமணம் செய்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கைது
Published on

கரூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்தவர் ஜெயலெட்சுமணன் (வயது 37). இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கரூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதையடுத்து ஜெயலெட்சுமணன் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்ததாக கரூர் மாவட்ட சைல்டு-லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது.இந்த தகவல் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா தலைமையிலான போலீசார் கரூர் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து சிறுமி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறுமியை கட்டாய திருமணம் செய்த ஜெயலெட்சுமணன் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பழனிவேல் (45), தாய் லதா (43), உறவினர் வசந்தா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ஜெயலெட்சுமணனின் தாய் நல்லம்மாளை (60) தேடி வருகின்றனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com