வேலூர் மாநகராட்சியில் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம்

வேலூர் மாநகராட்சியில் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் கமிஷனர் சங்கரன் மேற்பார்வையில், 2-மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினர்.

மண்டிதெரு, லாங்குபஜார், பழைய பஸ் நிலையப்பகுதிகளில் கடைகளுக்கு சென்று அவர்கள் வழங்கினர். அப்போது கொரோனா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2-வது மண்டலத்தில் மட்டும் சுமார் ஆயிரம் வணிகர்களுக்கு மேல் இந்த மருந்து பெட்டகம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com