பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜெயப்பிரியா, துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நகராட்சி உறுப்பினர்கள் உமாசங்கர், விஜயகுமார், அலமேலு, ராமு, புனிதா, வேல்ராஜ், ஆறுமுகம், குருப்பிரியா, செல்வராஜ், ராமதுரை, தமிழ்ச்செல்வன், பரமசிவன், மாரிசாமி, சங்கரன்கோவில் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் முகமது அலி, வர்த்தகர் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் முத்தையா, கணேசன், சங்கர சுப்பிரமணியன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com