காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

ஆங்கியனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்
Published on

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஆங்கியனூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி ஆங்கியனூர் தெற்கு தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முன்னதாக மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை ஊர்வலமாக வாடி வாசல் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங் கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் திருமானூர், லால்குடி, தா.பழூர், ஜெயங்கொண்டம், அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

11 பேர் காயம்

காளைகள் முட்டியதில் கருவிடச்சேரியை சேர்ந்த தனராஜ் (வயது32), கீழகாவட்டாங்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் (28) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுப்பிரமணியன் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம் பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஆங்கியனூர் கிராம பொதுமக்கள் செய் திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com