

தர்மபுரி,
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. தர்மபுரி, பாலக்கோடு கல்வி மாவட்டங்களுக்கு அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அரூர் கல்வி மாவட்டத்திற்கு அரூர் இந்தியன் மெட்ரிக் பள்ளியிலும் தலா 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசங்கள் அணிந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டனர்.