மாடம்பாக்கத்தில் பிளஸ்-2 மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார் கொலையா? போலீசார் விசாரணை

மாடம்பாக்கத்தில் பிளஸ்-2 மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடம்பாக்கத்தில் பிளஸ்-2 மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார் கொலையா? போலீசார் விசாரணை
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் தாய் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. கூலித்தொழிலாளி. இவரது மகன் கணபதி (வயது 18), தாம்பரத்தை அடுத்த சானடோரியத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தனது தந்தையிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் மாணவர் கணபதி வீடு திரும்ப வில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கணபதி கிடைக்கவில்லை

இது குறித்து நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி போலீசில் ஏழுமலை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கணபதியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மாடம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஒரு வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மாணவரின் உடலை கைப்பற்றினர். அது பிளஸ்-2 மாணவர் கணபதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரது தந்தை ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏழுமலை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல் காணாமல் போன தனது மகன் கணபதிதான் என்று உறுதி செய்தார். மாணவர் கணபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தன்னுடைய மகன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளது. ஆகவே தன்னுடைய மகனை யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம் என்று ஏழுமலை கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com