இரவில் மின் தடை; பொதுமக்கள் அவதி

இரவில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
இரவில் மின் தடை; பொதுமக்கள் அவதி
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டது. ஏற்கனவே கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் திணறி வரும் பொதுமக்கள் இரவு நேர மின் தடையால் பெரிதும் அவதிக்குள்ளாகினர். குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மின் தடையால் இரவில் சரியாக தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் மின்தடையால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளால் படிக்க முடியாமல் போனது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com