கொரோனாவால் புழல் சிறை கைதி சாவு

கொரோனாவால் புழல் சிறை கைதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கொரோனாவால் புழல் சிறை கைதி சாவு
Published on

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கோட்டி என்ற கோட்டீஸ்வரன்(வயது 52). இவர், திருவொற்றியூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 2018-ம் ஆண்டு முதல் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு கடந்த 9-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதற்காக அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கைதி கோட்டீஸ்வரன் உயிரிழந்தார் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com