

உறவுகளை வளர்த்துக்கொள்ள முடிவு செய்துகொள்ளலாம். பாலித்தீன் பை இனிமேல் பயன்படுத்தமாட்டேன் என்ற உறுதிமொழியை ஏற்கலாம். மழைநீரை சேமிக்க முயற்சிக்கலாம். போதை வாழ்வில் இருந்து என்னை மாற்றிக்கொள்வேன் என்ற நிலைப்பாட்டினை ஏற்கலாம். வீதியை சுத்தமாக வைத்துக்கொள்வேன். ஏரி, குளங்களை மாசுபடுத்தமாட்டேன் என்று தங்களுக்கு தாங்களாக முடிவு செய்வதுடன், பிறர் அவ்வாறு செய்ய அனுமதிக்காத நிலைப்பாட்டையும் எடுக்கலாம்.
புயல் காற்றுகள் மரங்களை பெயர்த்து போடலாம். மலைகளை அசைக்க முடியாது. புயலே அழிக்க முடியாத மலை வளங்களின் அழிவில் இருந்து பாதுகாப்போம். நமது முன்னோர்கள் மலைகளின் மீது கோவில்கள் கட்டினார்கள். மலைகளை பாதுகாத்தார்கள். ஆனால் இன்று கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் என்ற பெயரில் மலைகள் அனைத்தும் களவாடப்படுகின்றன. ஒரு மரம் வெட்டப்பட்டால் மீண்டும் சில ஆண்டுகளில் வளர்த்து எடுக்க முடியும். ஒரு மலை வெட்டப்பட்டால் எத்தனை யுகமானாலும் வளர்க்க முடியாது. மலை இயற்கை நமக்கு அளித்து இருக்கும் மிகப்பெரிய கொடை. மலையில் இருந்து பெரும் நீரூற்று காட்டாறாக வந்து வளம் தருகிறது. இன்னும் எத்தனையோ கொடைகளை தரும் மலைகளை காப்பது மக்களின் கடமை. மலைகள் மட்டுமல்ல இயற்கை தந்த ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், குட்டைகள் என ஒவ்வொன்றையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த புத்தாண்டில் உறுதி ஏற்போம்.
-முடிவேல் மரியா