அதிக கட்டண விதிப்பை கண்டித்து மின்கட்டண ரசீதை எரித்து போராட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது

அதிக மின்சார கட்டண விதிப்பை கண்டித்து பா.ஜனதா மாநிலம் முழுவதும் மின்கட்டண ரசீது எரிப்பு போராட்டத்தை நடத்தியது.
அதிக கட்டண விதிப்பை கண்டித்து மின்கட்டண ரசீதை எரித்து போராட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது
Published on

மும்பை,

மராட்டியத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அதிக மின்கட்டணம் விதிக்கப்பட்டதற்கு சினிமா, விளையாட்டு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் சமூகவலைதளங்களில் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்தநிலையில் பொதுமக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும், ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாநிலம் முழுவதும் நேற்று பா.ஜனதா மின்கட்டண ரசீது எரிப்பு போராட்டம் நடத்தியது. பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை மந்திரி பவன்குலே நாக்பூரில் உள்ள தனது வீட்டு அருகே மின்கட்டண ரசீதை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார். இதேபோல மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் மின் கட்டண ரசீது எரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மும்பையில்...

மும்பையில் நகர பா.ஜனதா துணைத்தலைவர் கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நேற்று பொதுமக்களிடம் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து சயான் சர்க்கிள் பகுதியில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மும்பை பா.ஜனதா தலைவர் மங்கள் பிரதாப் லோதா தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவித்த மக்களிடம் அதிக மின் கட்டணத்தை வசூலிக்கும் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் மின்கட்டண ரசீதை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மும்பை பா.ஜனதா செயலாளர் கராத்தே முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com