கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

போடியில் கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

போடி:

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் குபேந்திரன். அவர் வீட்டுக்கு முன்பு வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கேவில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.

குபேந்திரன் வீட்டுக்கு செல்லும் வழியில் கோவில் இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் கோவிலை இடித்து அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அந்த தெருவில் உள்ள கோவிலை இடித்து அகற்ற போடி நகராட்சி அதிகாரிகள் நேற்று வந்தனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் கோவிலை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோவிலை இடிக்காமல் மாற்று வழி ஏற்படுத்தவேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களும் தங்களுக்கு சில நாட்கள் கால அவகாசம் அளிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்காமல் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com