புதுவை சட்டசபை விரைவில் கூடுகிறது

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.
புதுவை சட்டசபை விரைவில் கூடுகிறது
Published on


புதுச்சேரி,

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூன்று மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாதத்துடன் பட்ஜெட் தொகை செலவிடப்பட்டுவிடும். அடுத்த மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கு புதிதாக பட்ஜெட் போட வேண்டும். இதற்காக புதுவை சட்டசபை விரைவில் கூட உள்ளது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டு உள்ளார். அந்த கடிதத்தில் பட்ஜெட், வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com