

புதுச்சேரி,
அம்சபிரபா கொலை செய்யப்பட்ட அன்றே போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் கொலையாளிகளை பிடித்திருக்கலாம். போலீசாரின் அலட்சியத்தால் கொலையாளிகளை நெருங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தடயங்களை தவறவிட்டனர்
இறந்த ஒருவரின் உடலை பார்வையிடும் சாதாரண போலீசாரே அவர் எப்படி இறந்திருப்பார்? என எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அம்சபிரபா கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது பெற்றோர் தெரிவித்தும் கூட, உருளையன்பேட்டை போலீசார் எடுத்த எடுப்பிலேயே தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் சரியாக விசாரணை நடத்தாமல் சம்பவ இடத்தில் பதிவு செய்யவேண்டிய தடயங்களையும் போலீசார் பதிவு செய்யவில்லை. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், கொலைக்கான தடயங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். சம்பவம் நடந்த உடனே எடுக்கவேண்டிய தடயங்கள் தற்போது 2 நாட்கள் ஆனதால் அது மறைந்துவிட்டது. தடயங்களை தவறவிட்ட போலீசார் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.