புதுக்கோட்டையில் ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை

புதுக்கோட்டையில் ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டையில் ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

புக்கோட்டை,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 38). இவர் புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது சண்முகசுந்தரம் திடீரென விஷத்தை குடித்தார். தான் மனவேதனையில் வாழ்க்கையை வெறுத்து விஷம் குடித்ததாக வீட்டில் இருந்தவர்களிடம் அவர் தெரிவித்தார். உடனே, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பலதகவல்கள் வெளிவந்தன. சண்முகசுந்தரம் உழவர் சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வந்தபோது அங்குள்ள அதிகாரிகளுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் சண்முகசுந்தரம் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் உழவர் சந்தையில் கடை அமைத்து வியாபாரம் செய்ய அவர் முயன்றார். ஆனால், அங்கு வியாபாரம் நடத்த அதிகாரிகள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் இருந்து வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com