

தாயில்பட்டி,
தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி, எட்டக்காபட்டி, ரெட்டியாபட்டி, சத்திரப்பட்டி, மடத்துப்பட்டி, மண் குண்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.