அரியவகை ஆந்தை குஞ்சுகள் மீட்பு

அரியவகை ஆந்தை குஞ்சுகள் மீட்கப்பட்டன.
அரியவகை ஆந்தை குஞ்சுகள் மீட்பு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் கல்யாண் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. கடந்த 3 மாதங்களாக இயங்காமல் இருந்த இந்த ஆலையை நேற்று பணியாளர்கள் சீரமைத்து கொண்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு பகுதியில் இருந்து பறவை குஞ்சுகள் நான்கு வித்தியாசமாக கத்தியபடி ஓடி வந்துள்ளன. பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்துடன் பறவை குஞ்சுகள் இருந்ததால் இதுகுறித்து வனத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பறவை குஞ்சுகளை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அவை அரிய வகையான கொட்டகை' எனும் இனத்தை சேர்ந்த ஆந்தை குஞ்சுகள். மலைத்தொடர்களில் வாழக்கூடியவை. இனப்பெருக்கத்திற்காக இங்கே வந்த தாய்ப்பறவை குஞ்சு பொரித்திருக்கலாம். தற்போது மீட்கப்பட்டுள்ள குஞ்சுகள் இன்னும் 10 நாட்களில் தனியாக வாழ பழகிவிடும், என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஆந்தை குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டு, கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com