தீபாவளி பரிசு வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி பரிசு வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பரிசு வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு தீபாவளி நெருங்கிய நிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் தீபாவளி பரிசாக அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டது.

ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் தீபாவளி பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. புதுவை பிரதேச தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபுராஜ் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com