பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு-ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2,300-க்கு விற்பனை

பரமத்திவேலூர் மலர் ஏலச்சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது. குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 300-க்கு விற்பனை ஆனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு-ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2,300-க்கு விற்பனை
Published on

பரமத்தி வேலூர்:

பரமத்திவேலூர் மலர் ஏலச்சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது. குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 300-க்கு விற்பனை ஆனது.

மலர் சாகுபடி

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் மலர்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மலர்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளிப்பூ கிலோ ரூ.150-க்கும், ரோஜாப்பூ கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.1,000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும் ஏலம் போனது.

குண்டுமல்லி

இந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.2ஆயிரத்து 300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளிப்பூ கிலோ ரூ.350-க்கும், ரோஜாப்பூ கிலோ ரூ.250-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும் ஏலம் போனது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com