ரவுடி வெட்டிக் கொலை: சிவகாசி கோர்ட்டில் 2 பேர் சரண் - காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேர், சிவகாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரவுடி வெட்டிக் கொலை: சிவகாசி கோர்ட்டில் 2 பேர் சரண் - காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி போலீசார் நடவடிக்கை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவருடைய மகன் சரவணன் என்ற சிந்தா சரவணன் (வயது 36). இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது பிரபல ரவுடியான பட்டுராஜை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கே.வி.கே.நகரில் வீட்டில் இருந்த சரவணனை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டையை சேர்ந்த மகாராஜன் (30) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நெல்லை மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த வாழ்வாங்கி மகன் வடிவேல் (37), மீளவிட்டானை சேர்ந்த பாலசிங் (39) ஆகிய 2 பேரும் சிவகாசி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தனர். நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். சரண் அடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த, தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com