மதுரை சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய ரவுடி போக்சோ சட்டத்தில் கைது

மதுரை சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய ரவுடி போக்சோ சட்டத்தில் கைது.
மதுரை சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய ரவுடி போக்சோ சட்டத்தில் கைது
Published on

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு காசிபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் என்ற தேசப்பன் (வயது 21). ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், அடிக்கடி சபரிமலைக்கு செல்வாராம்.

அப்படி செல்லும்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்குவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடை உரிமையாளரான பாட்டியின் 14 வயது பேத்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் செல்போன் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்துக்கொண்டனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தேசப்பன், அந்த சிறுமியை ரகசியமாக சென்னைக்கு கடத்தி வந்து குடும்பம் நடத்தினார். தற்போது 17 வயதான அந்த சிறுமி, 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீசார் துணையுடன் சென்று பார்த்தபோது தேசப்பன், அந்த சிறுமியை திருமணம் செய்யாமல் ரகசியமாக குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதற்கு தேசப்பனின் தாய் கீதா உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து கீதாவும், தேசப்பனும் கைது செய்யப்பட்டனர். தேசப்பன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com