சூலூர் அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்

சூலூர் அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சூலூர் அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்
Published on

கருமத்தம்பட்டி,

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி புதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரிக்குள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது. உடனே லாரியை ஓட்டி வந்த சுரேசிடம் கேட்டபோது அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதுபோன்று முத்துக்கவுண்டன்புதூரில் பறக்கும்படையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் இருந்த மணிகண்டன் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்து 500 இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. எனவே அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் சூலூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com