

அப்போது அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் முட்டை தரமாக உள்ளதா என்று தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த மாணவர்களிடம் கழிவறை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
மாணவர்களின் வருகை பதிவேடு, விடுதியில் உள்ள பொருட்களின் இருப்பு, மாணவர்களுக்கு சோப்பு, பாய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டிருப்பது குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.