

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீசார், விழுப்பணங்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை ஒருவர் ஏற்றி வந்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரித்தபோது, அவர் அதே கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் ராஜேந்திரன்(வயது 34) என்பதும், அவர் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மோட்டார் சைக்கிளை கைப்பற்றி ராஜேந்திரனை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.