கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூரில் மரக்கன்று நடும் விழா; அமைச்சர் நாசர் பங்கேற்பு

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூரில் மரக்கன்று நடும் விழா; அமைச்சர் நாசர் பங்கேற்பு
Published on

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி

சா.மு.நாசர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், மகாலிங்கம், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com