உடல் பருமன் காரணமாக மாணவர் திடீர் சாவு

உடல் பருமன் காரணமாக மாணவர் திடீர் சாவு.
உடல் பருமன் காரணமாக மாணவர் திடீர் சாவு
Published on

பரமத்திவேலூர்,

மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே குட்லாம்பாறையை சேர்ந்த சின்னத்தம்பி மகன் திவாகர் (வயது 13). எஸ்.வாழவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். திவாகர் உடல் பருமன் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை தூங்கிக்கொண்டிருந்த திவாகர் தனது தந்தையிடம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் தூங்கினார்.

சிறிது நேரம் கழித்து தந்தை மகன் திவாகரை எழுப்பியபோது பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்தாராம். உடனடியாக மாணவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திவாகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவர் திடீர் சாவு குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com