வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

காட்டுப்புத்தூர், செப்.15-
காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராம சமுத்திரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மகன் மூவராஜா (வயது 19). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் மகன் விக்னேஷ் (24) என்பவர் குடிபோதையில் தகராறு செய்து மூவராஜாவ அரிவாளால் வெட்டினார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com