

விருதுநகர்,
விருதுநகர் பகுதியில் நகராட்சி கடைகளில் வாடகை பாக்கி உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்கும் படி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து நகராட்சி ஆய்வாளர்கள் ரவி, சிவராமன், ஹென்றி மற்றும் வருவாய் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆண்டவர் ஆகியோர் நேற்று நகராட்சி பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைத்தனர், தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய் ஆய்வாளர் ரவி தெரிவித்தார்.