மளிகை கடைகளுக்கு ‘சீல்’

திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி திறந்து வியாபாரம் செய்த 2 மளிகை கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மளிகை கடைகளுக்கு ‘சீல்’
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான அதிகாரிகள் நகர் முழுவதும் சோதனை நடத்தினர்.

அப்போது ஊரடங்கை மீறி திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் 2 மளிகைக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கினர்.

இதையடுத்து அந்த 2 மளிகை கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com