செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே பாலக்கோம்பை கென்னடி நகர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் ராஜதானி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதி வழியாக செம்மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும், டிராக்டர்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பியோடினர்.

உடனே போலீசார், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் பாலக்கோம்பையை சேர்ந்த வெங்கடேசன், குருநாதன் என்றும், அவர்கள் அனுமதியின்றி செம்மண்ணை டிராக்டர்கள் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com