மோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

மோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு.
மோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
Published on

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், மோசடி தொடர்பாக மேலும் 2 வழக்குகள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்வதற்காக செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் 15-ந் தேதி(நேற்று) சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செந்தில்பாலாஜி சிறப்பு கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட்டு மூலம் விலக்கு பெற்றார்.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி என்.ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் அவருக்காக ஆஜரான வக்கீல் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார். குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர்.

இதன்பின்பு, வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com