ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி

பா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி., முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பல் இல்லாத பாம்பு போன்றவர் என்று விமர்சித்தார்.
ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி
Published on

பெங்களூரு,

சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் ஒரு மனிதன். ஆனால் ஷோபா எம்.பி. மனிதரா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. பேசும்போது பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் பேச வேண்டும். அவர் பாம்பு குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் கூறுவது போல் நான் பல் இல்லாத பாம்பு இல்லை.

தரக்குறைவாக பேசுவதை ஷோபா கைவிட வேண்டும். கூட்டணி அரசுக்கு அதிர்ச்சி தருவதாக எடியூரப்பா சொன்னார். ஆனால் அவரிடம் அத்தகைய அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை. எடியூரப்பாவுக்கு உண்மை தெரியாது. அவர் எப்போதும் பொய் தான் பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com