டாஸ்மாக் பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தர செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை திண்டுக்கல்லில் நடத்தினர்.
டாஸ்மாக் பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்
Published on

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும். சில்லறை மதுபான விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். அதன் இறுதியில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று திண்டுக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில செயலாளர் ஆர்.மணிகண்டன் தலைமையில் மாவட்ட தலைவர் அருணாசலம், கவுரவ தலைவர் மணிகண்டன், செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணியாளர்களிடம் கையெழுத்து பெற்றனர். அதேபோல் நகரில் பல்வேறு பகுதியில் பொதுமக்களிடமும் கையெழுத்து வாங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com