குளத்தில் தவறி விழுந்து விவசாயி சாவு

தென்காசி அருகே குளத்தில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
குளத்தில் தவறி விழுந்து விவசாயி சாவு
Published on

தென்காசி,

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் கிராமம் உச்சிமாகாளி அம்மன் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 60), விவசாயி.

இவர் நேற்று முன்தினம் இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கருப்பசாமியை தேடிச் சென்றனர்.

அப்போது அவர் அங்குள்ள குளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்பசாமி குளத்தில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com