

இதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்று திருவள்ளூரை அடுத்த எளாவூர் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலத்திலிருந்து திருட்டுத்தனமாக உரிய ஆவணம் இன்றி நெல் மூட்டைகளை கொண்டு வந்த 7 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதிலிருந்து தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.