தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை கல்வித்துறை எச்சரிக்கை

புதுவை அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை கல்வித்துறை எச்சரிக்கை
Published on

புதுச்சேரி

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சிலர் பள்ளி பணி நேரம் முடிந்த பின்னர் கல்வித்துறையின் விதிகளை மீறி தனியார் பள்ளிகள், தனியார் பயிற்சி மையங்கள் போன்றவற்றில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக கல்வித்துறைக்கு புகார்கள் வருகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் சென்டர்கள், தனியார் பயிற்சி மையங்கள், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்களைத் தடுக்க புதுவை கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறி தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புதுவை அரசு முதன்மை கல்வி அதிகாரி மூலம் அனைத்து அரசு பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com