

கோவில்பட்டி:
கோவில்பட்டி புனித சூசையப்பர் கிறிஸ்தவ ஆலயத்தில் தவக்கால திருயாத்திரை தியானம் நடந்தது. குரு குழந்தைராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. குரு விசுவாசராஜ் மறையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிலுவைப்பாதை, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வின்சென்ட் தே பவுல்சபை உறுப்பினர்கள் திருயாத்திரையாக வந்து பங்கேற்றனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை ஜேக்கப் ஆகியோர் செய்து இருந்தனர்.