படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் நீந்தி நாகை அருகே கரை சேர்ந்தனர்

மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள், நீந்தி நாகை அருகே கரை சேர்ந்தனர்.
படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் நீந்தி நாகை அருகே கரை சேர்ந்தனர்
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு அருகே கண்டியன்காடு கடற்கரையில் பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கீழையூர் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகை பார்வையிட்டனர். அப்போது காமேஸ்வரம் பகுதிக்கு இலங்கை மீனவர்கள் 3 பேர் வந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து போலீசார் 3 இலங்கை மீனவர்களிடமும் விசாரித்தனர். அதில் அவர்கள் இலங்கை பருத்தித்துறை கிம்பர்சிட்டி பகுதியை சேர்ந்த கடற்கஜன் (வயது30), விஜேந்தன் (35), ஸ்ரீமுருகன் (30) ஆகியோர் என்பதும், கரை ஒதுங்கி கிடந்த பைபர் படகு இவர்கள் வந்தது தான் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு பழுதானதால் கடலில் குதித்து நீந்தி காமேஸ்வரம் பகுதியில் கரை சேர்ந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com