அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் பேர் தேர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் பேர் தேர்ச்சி
Published on

அரியலூர்,

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 174 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 082 மாணவர்களும், 5 ஆயிரத்து 372 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 454 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 872 மாணவர்களும், 5 ஆயிரத்து 238 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.71 சதவீதம் ஆகும்.

செல்போன் மூலம்...

மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் செல்போன் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு வந்தது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. சிலர் பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை பார்த்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com