திருச்சி பொன்மலையில் தலையில் கல்லை போட்டு சமையல்காரர் படுகொலை வாலிபர் போலீசில் சரண்

திருச்சி பொன்மலையில் தலையில் கல்லை போட்டு சமையல்காரர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
திருச்சி பொன்மலையில் தலையில் கல்லை போட்டு சமையல்காரர் படுகொலை வாலிபர் போலீசில் சரண்
Published on

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலை அடிவாரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 46). சமையல்காரர். இவருக்கு மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (32).

இவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று மாலை பொன்மலை சூசையப்பர் தேவாலயம் அருகே சவுத் (டி) பகுதியில் உள்ள பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தலையில் கல்லை போட்டு கொலை

அப்போது கனகராஜை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டு சம்பத்குமார் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சம்பத்குமார் பொன்மலை போலீசில் சரண் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை எதார்த்தமாக நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com