சாலையில் நடந்து சென்ற டெய்லர் கல் தடுக்கி விழுந்து பலியானார்.

சாலையில் நடந்து சென்ற டெய்லர் கல் தடுக்கி விழுந்து சாவு
சாலையில் நடந்து சென்ற டெய்லர் கல் தடுக்கி விழுந்து பலியானார்.
Published on

ஜோலார்பேட்டை

சாலையில் நடந்து சென்ற டெய்லர் கல் தடுக்கி விழுந்து பலியானார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரகாரம் பூங்கான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை. இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 42). டெய்லராக இருந்தார். கடந்த 2-ந் தேதி அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது சாலையோரம் இருந்த கல்லில் தடுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார்.

அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று சத்தியமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்தியமூர்த்தியின் தந்தை அம்மாவாசை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவருக்கு ஸ்ரீதேவி என்கின்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com