ஓய்வு வயதை உயர்த்தி உத்தரவிடக்கோரிய ஆசிரியர்களின் மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஓய்வு வயதை உயர்த்தி உத்தரவிடக்கோரிய ஆசிரியர்களின் மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஓய்வு வயதை உயர்த்தி உத்தரவிடக்கோரிய ஆசிரியர்களின் மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இந்த ஆணை, கடந்த மே மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை தங்களுக்கும் வழங்கக்கோரி ஏராளமான ஆசிரியர்கள் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதுபோன்ற மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி நிஷாபானு, மனுதாரர்களை பணியில் இருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்தநிலையில் இதே கோரிக்கையுடன் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு வயது உயர்வு அரசாணையின் பலனை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் விசாரித்தார். முடிவில், மனுதாரர்கள் பணியில் இருந்து முறையாக ஓய்வு பெற்றுள்ளனர். இந்த கல்வி ஆண்டின் மத்தியில் ஓய்வு பெற்றதால் மாணவர்களின் நலன் கருதி ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com