திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர் 10-வது கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அக்தர்உசேன். இவருடைய மகள் சமீராபேகம் (வயது 24). இவருக்கும், ஆந்திர மாநிலம் ரேனிகுண்டாவைச் சேர்ந்த உறவினர் ஒருவரது மகனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையில் சமீராபேகத்தின் தந்தை அக்தர்உசேன் திடீரென இறந்துவிட்டதால் இவர்களின் திருமணம் ஓராண்டுக்கு தள்ளிப்போனது.சமீரா பேகம், அவருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அவ்வப்போது செல்போனில் பேசி வந்தார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் போனில் பேசிய சமீரா பேகம், அதன்பிறகு திடீரென மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமீராபேகத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com