

தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியில் பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.