தானேயில் மகனை கொன்று இசை ஆசிரியர் தற்கொலை

2-வது மனைவி விவாகரத்து கேட்டதால் மகனை கொன்று இசை ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
தானேயில் மகனை கொன்று இசை ஆசிரியர் தற்கொலை
Published on

தானே,

தானே காசர்வடவிலி பகுதியில் உள்ள போஸ் சொசைட்டி கட்டிடத்தில் வசித்து வந்தவர் சவுமிக் கோஷ். இசை ஆசிரியர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன்பின்னர் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அந்த பெண்ணும் கணவரை பிரிந்தவர் ஆவார். சவுமிக் கோசுக்கு முதல் மனைவி மூலம் 7 வயதில் ஒரு மகன் இருந்தான்.

இந்தநிலையில், சவுமிக் கோசுக்கும், அவரது 2-வது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாக அந்த பெண் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அவர் விவாகரத்து மூலம் நிரந்தரமாக பிரிய முடிவு செய்து, சவுமிக் கோசை சந்தித்து பேசியிருக்கிறார். இதனால் சவுமிக் கோஷ் மனமுடைந்தார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் சவுமிக் கோஷ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அவரது மகன் அருகில் பிணமாக கிடந்தான். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், 2-வது மனைவி விவாகரத்து கேட்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com